":: TVU ::" http://www.tamilvu.org/slet/l0L00/l0L00per.jsp?sno=87
Posts
ஜனவரி 2 2022
- Get link
- X
- Other Apps
வாழ்க்கையை புரிந்து கொள்ளாதவர்களால் இலக்கியத்தை புரிந்து கொள்ள முடியாது என்றார்கள் ஆனால் இலக்கியத்தை புரிந்து கொள்ளாதவர்களால் வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியாதா ? நிச்சயமாக முடியும் நல்லதொரு சாமான்ய மனிதனுக்கு கவிதை தெரியாது இலக்கியம் புரியாது வேதம் படித்ததில்லை சித்தாங்கள் பிடித்தில்லை ஆனால் கர்மவீரனாக இதையெல்லாம் படித்து கரை கண்ட மேதாவிகளை விட நற்ண்புகளோடு நல்மனிதனாக வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறான் எண்ணிக்கையில் நிறைந்த அவனால்தான் இவர்கள் பிழைப்பு நடந்து கொண்டிருக்கிறது.
சமூகம்
- Get link
- X
- Other Apps
சமூகம் மழலையை தந்தை காக்க வேண்டும் மரத்தை உழவன் காக்க வேண்டூம் குலத்தை வீரன் காக்க வேண்டும் கொள்கையை தலைவன் காக்க வேன்டும் ஒரு சங்கிலியின் தனி வளைய பலகீனம் கட்டையே தளர்த்தும் ஒரு சமுதாயத்தின் தனி மனித துரோகமும் நாட்டையே சிதைக்கும் காகம் போல் இன உணர்வு வளர்ப்போர் கல்லில் எழுத்தாக வாழ்வார் நாகம் போல் பகை உணர்வு வளர்ப்போர் எரியில் தீயாக அழிவார் விடுதலையென்பது விலை மதிக்க முடியாதது எல்லாரிடமும் தரக்கூடாது சுதந்திரமென்பது உயிர் மூச்சு எப்போதும் தர முடியாது தான் பெற்ற கல்வியை இழிவு செய்பவனை விட தாழ்ந்த மிருகமில்லை தான் பெற்ற இனத்தை கேலி செய்பவனைவிட கீழான மிருகமில்லை இதயத்தில் ஏற்பட...
மனிதம்
- Get link
- X
- Other Apps
மனிதம் நிலமே நடுங்கி புரண்டாலும் நடுங்கி நிற்காது மனிதம் கடலே பெருகி புகுந்தாலும் கலங்கி கதறாது மனிதம் அன்பென்பது இன்பத்தின் வேர் ஆசையே துன்பத்தின் வேர் காமமே காதலின் வேர் காதலே மனிதத்தின் வேர் மலரும் ஒவ்வொரு பூவும் பூமி இன்னும் சலிக்கவில்லை என்கிறது பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சாமி இன்னும் சலிக்கவில்லை என்கிறது மனித உறவுகளுக்கெல்லாம் ஆதாரமானது ஆதாமின் உடலுறவு மனித துயரங்களுக்கெல்லாம் ஆரம்பமானது ஆதாமின் உடலுறவு கவிதையும் காதலும் இளமையோடு உதிர்ந்து விடுகிறது கயமையும் காமமும் முதுமையிலும் உலர்ந்து விடுவதில்லை அலைகளின் மீது ஙரை போல ஆடிக்கொண்டிருக்கிருக்கும் உலகம் ஆசைகளின் மீது அலை போல வாடிக்கொண்டிருக்கும் மனிதம் நல்லவர் இறக்கும் போது ஆன்மா விடுதலையடைகிறது தீயவர் இறக்கும் போது உலகம் விடுதலையடைகிறது வளமை என்பதை மனித முன்னேற்றத்தின் சாட்சி என சொல்கிறார் வறுமை என்பதை எந்த முன்னேற்றத்தின் சா...