ஜனவரி 2 2022

வாழ்க்கையை புரிந்து கொள்ளாதவர்களால் 
இலக்கியத்தை புரிந்து கொள்ள முடியாது என்றார்கள்
ஆனால் இலக்கியத்தை புரிந்து கொள்ளாதவர்களால் 
வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியாதா ?
 
நிச்சயமாக முடியும்
நல்லதொரு சாமான்ய மனிதனுக்கு
கவிதை தெரியாது
இலக்கியம் புரியாது
வேதம் படித்ததில்லை
சித்தாங்கள் பிடித்தில்லை
ஆனால் கர்மவீரனாக‌
இதையெல்லாம் படித்து கரை கண்ட 
மேதாவிகளை விட‌
நற்ண்புகளோடு
நல்மனிதனாக வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறான்
எண்ணிக்கையில் நிறைந்த அவனால்தான் 
இவர்கள் பிழைப்பு நடந்து கொண்டிருக்கிறது.

Comments

Popular posts from this blog

மனிதம்

சமூகம்