சமூகம்

சமூகம் 
             மழலையை தந்தை காக்க வேண்டும்
             மரத்தை உழவன் காக்க வேண்டூம்
            குலத்தை வீரன் காக்க வேண்டும்
            கொள்கையை தலைவன் காக்க வேன்டும்
ஒரு சங்கிலியின் தனி வளைய பலகீனம் கட்டையே தளர்த்தும்
ஒரு சமுதாயத்தின் தனி மனித துரோகமும் நாட்டையே சிதைக்கும்
காகம் போல் இன உணர்வு வளர்ப்போர் கல்லில் எழுத்தாக வாழ்வார்
நாகம் போல் பகை உணர்வு வளர்ப்போர் எரியில் தீயாக அழிவார்
விடுதலையென்பது விலை மதிக்க முடியாதது எல்லாரிடமும் தரக்கூடாது
சுதந்திரமென்பது உயிர் மூச்சு எப்போதும் தர முடியாது
தான் பெற்ற கல்வியை இழிவு செய்பவனை விட தாழ்ந்த மிருகமில்லை
தான் பெற்ற இனத்தை கேலி செய்பவனைவிட கீழான மிருகமில்லை
இதயத்தில் ஏற்படும் கருத்து மோதல்கள் இறுதியில் கவிதையாகும்
சமுதாயத்தில் ஏற்படும் கருத்து மோதல்கள் கடைசியில் கலவரமாகும்
மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஏமாற்றமே அடைகிறார்கள்
மாற்றத்தை எதிர்பார்த்தவர்கள் மகிழ்வே அடைகிறார்கள்
அனல் என்ற நெருப்பிலே அடுப்பெரிக்கவா சந்தனம்
ஊழல் என்று சுடலையிலே சுட்டெரிக்கவா சுதந்திரம்
பண்பாடு என்பது நல்ல பண்புகளால் எழதப்பட்ட ஏடு
கட்டுபாடு என்பது நல்ல கடமைகளால் கட்டப்பட்ட வீடு

Comments

Popular posts from this blog

மனிதம்

ஜனவரி 2 2022